ஜோ பைடனை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

கொழும்பு,செப் 23

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் வைத்தே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார்.

Leave a Reply