இலங்கைக்கான பயண ஆலோசனையில் மாற்றத்தை மேற்கொண்ட அமெரிக்கா!

இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை நேற்று (22) புதுப்பித்துள்ள அமெரிக்கா, இலங்கைக்கு பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மூன்றாம் நிலையில் இருந்த பயண ஆலோசனை, புதுப்பித்தலின் மூலம் இரண்டாம் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு, மருந்து உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் QR அமைப்பினால் நிலைமையை தணிக்க முடிந்தது.

விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறு உணவு மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தது, குறிப்பாக தொலைதூர பகுதிகளில், ஆனால் பல ஹோட்டல்கள், உணவகங்கள், மளிகை கடைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொருட்கள் கிடைக்கின்றன.

குறிப்பிட்ட காலத்திற்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, ஆனால் பெரும்பாலான சுற்றுலா ஹோட்டல்களில் ஜெனரேட்டர்கள் உள்ளன என்று அது கூறுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply