
கொழும்பு,செப் 24
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் போராட்ட பேரணி சென்ற வேளையிலேயே இந்த கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.