பாதுகாப்பான அணுகுதல் தொடர்பான பயிற்சி நெறி மட்டக்களப்பில்!

பாதுகாப்பான அணுகுதல் தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தொண்டர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்புக் கிளையைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 25 தொண்டர்களுக்கு செஞ்சிலுவை அமைப்பைப் பற்றிய கொள்கை விளக்கங்கள், மற்றும் தொண்டர் சேவை செய்யும்போது எவ்வாறு நடந்து கொள்தல், தொண்டர் சேவையின்போது அணிய வேண்டிய பாதுகாப்பான அங்கிகள், உள்ளிட்ட பல பயிற்சிகளும், விளக்கங்களும், வழங்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கிளையின் தலைவர் த.வசந்தராஜா, பொருளாளர் வ.சக்திவேல், நிறைவேற்று உத்தியோகஸ்த்தர்  பி.வேணுஷா, மற்றும் ருத்திராஜ் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு தொண்டர்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *