இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சனத் பூஜித 2017 ஆண்டு நவம்பர் மாதம் முதல் பரீட்சை ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.