வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் ஆழ்ந்திருந்த நேரத்தில், அங்கு வந்த திருடன் தனது கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொள்வதோடு, சந்தேக நபரைக்கு வலைவீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் சாரா 15 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் நிறைவு!