துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பாடசாலை மாணவி!

பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில், வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவரை நபர் ஒருவர் துஸ்;பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய பாடசாலை மாணவி நேற்று பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிராமத்திற்குச் செல்லும் கிளை வீதியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், வீதியில் மாணவியை மறித்து, மாணவியைத் தாக்கி, அருகில் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர், குறித்த நபர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற போது, மாணவி சந்தேகநபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *