இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத ‘குஷ்’ எனப்படும் கஞ்சா பொதியொன்றை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று மத்திய தபால் பரிவர்த்தனையின் பண்ட அனுமதி பிரிவில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான 10 பொதிகளை சோதனையிட்ட போது, அதிக விலையுயர்ந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் கொழும்பு, அஹங்கம, பிலியந்தலை மற்றும் கண்டி நகரங்களை சுட்டிக்காட்டி போலியாக முகவரிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 10 பொதிகளிலும் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதி மிக்க ஒரு கிலோ 300 கிராம் எடையுள்ள இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத குஷ் எனப்படும் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.