நிக்கவெரட்டியவில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் – எரிவாயு கசிவு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம்!

நிக்கவெரட்டிய, கந்தேகெதர பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும், இதன்காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு அல்லது வேறு காரணங்களால் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த மாதத்தில் பதிவாகியுள்ள 5ஆவது வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *