அறிகுறிகள் இல்லாத கொரோா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் வழக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் சீரான இடைவெளியில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *