வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட உதவி ஆய்வாளர் ரொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இடங்களிலுள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்திவிட கூடும்.
காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் எரிவாயு நாற்றம் வீசினால் மின்சார குமிழிகளை ஒளிர செய்யாமல், கதவு, ஜன்னல்களை திறந்து, நாற்றம் குறைவடையும் வரை சமையல் எரிவாயுவை பயன்படுத்த வேண்டாம்.
இதேவேளை, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி! ஆ.கேதீஸ்வரன்