மோல்னுபிரவீர் வில்லையினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

மோல்னுபிரவீர் வில்லையினை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.

கொரோனா நோயாளிகளுக்காக, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மோல்னுபிரவீர் வில்லை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை நாட்டுக்குக் கொண்டுவந்தது போன்றே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *