தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவலையளிக்கின்றது! சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடிவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்திருக்கின்றது.

கட்டளையை தான் மீளப்பெற முடியாதென்றும் ஆனால், ஒரு சில திருத்தங்களுடன் குறிப்பாக கோhவில்களிலும், தேவாலயங்களிலும் வழிபடலாம் அன்னதானம் கொடுக்கலாம் என்ற மாதிரியான சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, பொது இடத்தில் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள்.

3 மணிநேரம் எமது சட்டத்தரணிகள் தொடர்ந்து எங்களுடைய சமர்ப்பணங்களை சமர்ப்பித்தும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்றால் விதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு நீடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *