அனலைதீவு கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை கடற்படையினரால் மீட்பு

கடலில் மிதந்து வந்த 28 கிலோ எடையுடைய மஞ்சள் மூடையொன்று, இன்று (வெள்ளிக்கிழமை) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு கடலில் சந்தேகத்திற்கு இடமான மூடையொன்று,  இன்று காலை மிதந்து வந்துள்ளது.

அதனை கடற்படையினர் எடுத்து பிரித்துப் பார்த்தபோது, அதில் மஞ்சள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மஞ்சள் மூடை எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *