
முல்லைத்தீவு- பழம்பாசி 17 ஆம் கட்டை கிராமத்தில் அறநெறி பாடசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தங்கராசா நிசாந்தன் தலைமையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தாய்த் தமிழ் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சி.மோகனராசா மற்றும் தண்டுவான் வித்தியாலயத்தின் அதிபர் கு.பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.