மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த ஒருவர் கைது!

மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த யானையை புதைத்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் கல்லடி 6ஆம் கட்டைப் பகுதியில் உயிரிழந்த காட்டு யானையை குழித்தோண்டி புதைத்தக் குற்றத்திற்காக குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த காட்டு யானையை குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புதைக்கப்பட்ட யானையைத் தேடுதல் நவடிக்கையின் பின்னரே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உறவினர் ஒருவரின் 4 ஏக்கர் காணியை குத்தகைக்கு பெற்று பப்பாசி மற்றும் மிளகாய் விவசாயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசங்களால் கைது செய்யப்பட்டவரின் உறவினரின் வீட்டிலிருந்து விவசாயக் காணியைச் சுற்றி மின்சாரத்தை பெற்று மின்சார வேலியை அமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்போது குறித்த யானை நிகவரெட்டிய மிருக வைத்திர் இசுரு என்பவரினால் பிரேதபரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கிண்ரனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *