மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம்!

மன்னாரில் நாளை மாவீரர் தினத்தை அனுஸ்;டிக்கவுள்ளதாக கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிளால் இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதிவான் நிராகரித்துள்ளார்.

தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளை சனிக்கிழமை மன்னாரில் மாவீரர் தினம் அனுஸ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக தடை விதிக்க கோரி மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் போதிய சாட்சிகள் மன்றில் சமர்ப்பிக்கப்படாமையால், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்தார்.

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிசார் செய்த விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *