
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தி பெறாத மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
திறன்கள் அபிவிருத்தி தொழிற்கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தப் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் பயிற்சி நெறிகள், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், காரைநகர், சுன்னாகம், கைதடி, பண்டத்தரிப்பு , வல்வெட்டித்துறை ஆகிய நிலையங்களில் 3 , 6 , 12 ,18 ஆகிய மாத காலப் பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பயிற்சிக் காலத்துக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அந்தந்த பிரதேசங்களில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களுக்குச் சென்று தமக்குப் பொருத்தமான பயிற்சி நெறிகளைத் தெரிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளனர்.