முன்னாள் ஜனாதிபதி அரசியலில் குழந்தை: தனசிறி அமரதுங்க

கொழும்பு, செப் 25

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் குழந்தை என தெஹிவளை கல்கிஸை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் தோல்விக்கு அரசியல் எதுவும் தெரியாத குழந்தைகளைக் கொண்டு வருவதே முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் தெரியாது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *