தம்புள்ளையில் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 46 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி 8 கிராம் 710 மில்லிகிராம் அமோனியா, 9 வோட்டர் ஜெல் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.