பிறந்த தினத்தை நினைவூட்டும் புகைப்படம் அனுப்பிய கோபத்தில் கடற்படை தாதிய மாணவன் ஒருவன் தமிழ் தாதிய மாணவன் மீது சரமாரித் தாக்குதலை நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதிய பயிற்சிக் கல்லூரியில் பலர் கல்வி கற்று வரும் நிலையில் அங்கே கடற்படையைச் சேர்ந்தவர்களும் தாதிய பயிற்சியை பெற்று வருகின்றனர்.
லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என சமிக்ஞை காட்டிய இராணுவ அதிகாரியின் படத்தை கடந்த மே-19 அன்று (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில்) மேற்படி மாணவர்களில் கடற்படை தாதிய மாணவர்கள் தமிழ் தாதிய மாணவர்களிற்கு அனுப்பிக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தனராம்.
இப்படி சீற்றத்தை ஏற்படுத்திய கடற்படைத்தாதிய மாணவர்களின் இலக்கத்திற்கு பிறந்த நாளிற்கு கேக் வெட்டும் படத்தை தமிழ்தாதிய மாணவன் இன்று அனுப்பியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த கடற்படை தாதிய மாணவன். தமிழ் தாதிய மாணவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த விடயம் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போது ‘நாட்டின் சூழலில் நீங்கள் ஏன் கேக் வெட்டும் படத்தை இன்று அனுப்பினீர்கள்?’ எனக் கேட்டு, வேறு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நிர்வாகம் அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தது எனத் தெரிவிக்கப்பட்டது.