இலங்கைக்குள் நுளையும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தூதுக்குழுவுடன் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், அவர்கள் 09/25 இன்று மாலை 04.30 மணியளவில் தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸின் KR-654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதன்போது குறித்த குழுவை வரவேற்க இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவும் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருந்து எதிர்வரும் 09/28 ஆம் திகதி வரை விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *