காரைநகரில் இருந்து ஊர்காவற்றுறைக்கு படகுப்பாதையூடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தில்!

யாழ்ப்பாணம், காரைநகரில் இருந்து ஊர்காவற்றுறைக்கு படகுப்பாதையூடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே பயணித்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகுப் பாதை பயணம் அச்சுறுத்தல் மிக்கதாக உள்ளதென அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். தண்ணீரில் நடந்தே படகுப் பாதையில் ஏறவேண்டியுள்ளது.

இதில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், நீதிமன்றுக்கு வரும் மக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்கு நிதி ஒதுக்குவதாக 2015 ஆம் ஆண்டு கடந்த அரசும், 2021 ஆண்டிலும் தற்போதைய அரசும் கூறப்பட்டது.

ஆனால், கேபிள் மூலமாக இயக்கப்படும் இந்த படகுப் பாதையை மாற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பயணிப்போர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்தி வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விக்னேஸ்வரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *