
காஸ் சிலிண்டர் வெடித்ததில் 19 வயதான யுவதியொருவர் உயிரிழந்தார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள தனது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தமையால் இவ் விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.