இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொழும்பு, செப். 26: புலம்பெயர் பணியாளர்கள், புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது, சுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் அனுப்புமாறும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்களை அனுப்புவதை தவிர்க்குமாறும் இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு அனுப்பப்படும் பரிசு பொருட்கள், பொதிகள் உள்ளிட்டவை காணாமல்போதல், சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து சுங்கத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *