சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என நாட்டு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பொது மக்கள் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுதானியங்களைக் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் ஒன்றினை வகுக்கவுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *