மன்னார் மாந்தை சந்தியில் அரசியல் தீர்வை வலியுறுத்தி 57வது நாளாவும் கவனயீர்ப்பு போராட்டம்

<!–

மன்னார் மாந்தை சந்தியில் அரசியல் தீர்வை வலியுறுத்தி 57வது நாளாவும் கவனயீர்ப்பு போராட்டம் – Athavan News

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 57 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் மன்னார் மாந்தை சந்தி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 57 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம்பெற்றது.

குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *