யாழில், வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி வன்முறை!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெறறோல் குண்டு வீசியுள்ளதுடன் வன்முறையில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த, இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு இந்த சம்பவத்தினை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் பெற்றோல் குண்டு வீசியுள்ளதுடன் வீட்டில் இருந்து சொத்துக்களுக்கு தீ வைத்துள்ளனர்.

மேலும்,10102 நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 18 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *