பேரூந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!

வடமராட்சி, கரணவாய் தெற்கு- மண்டான் வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேரூந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், இளம்பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.

படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *