வவுனியாவில் 63 குடும்பங்கள் பாதிப்பு: ஒருவர் மரணம்

வவுனியாவில் மழை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கன மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்களும் வெள்ள நீர் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

வவுனியா – இராசேந்திரங்குளம் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 103 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளும் பகுதியளவில் சேதடைந்துள்ளன.

இதுவரையில், 63 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *