மாவீரர் நினைவேந்தல்- எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்கிறார் மாவை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் என்பதுடன் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் “முடிவு என்பது அஞ்சலி செய்வதற்கு ஆதரவான தீர்ப்புதான்.

ஆனால் ஏனைய நீதிபதிகள் தீர்மானித்தது வேறுபாடுகளாக அமைந்திருப்பது போல தெரிகின்றது.

அதற்கான சரியான பதிலை சட்டத்தரணி சிறிகாந்தா  வழங்குவார். நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *