தென்னாபிரிக்காவில் அடையாளங் காணப்பட்ட Omicron Covid அச்சநிலைமை காரணமாக ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்கு இலங்கை பயணத்தடை விதித்துள்ளது.
அதன்படி Eswatini, Lesotho, Mozambique, Namibia, South Africa மற்றும் Zimbabwe ஆகிய 6 ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பிரஜைகள் ஏதேனும் சந்தர்ப்பத்தில் நாட்டிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய திரிபுக்கு பெயர் சுட்டிய உலக சுகாதார ஸ்தாபனம்