கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் காஸ் சிலிண்டர்கள் வெடிக்கவில்லை! – ஆய்வில் உறுதி என்கிறது அரசு

கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்களில் வெடிப்பு ஏற்படவில்லை. இதனை மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.

  • இவ்வாறு கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிவாயுசிலிண்டர்கள் தொடர்பில் சமூகத்தில் பேசப்பட்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இக்குழுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்களில் வெடிப்பு ஏற்படவில்லை என்றும், இதனை மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய 18 லீற்றர் எரிவாயு சிலிண்டரை இடைநிறுத்தவும் லிட்ரோ நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எரிவாயு இணைப்புகள் தொடர்பில் நிலவும் பொய்யான கருத்தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், லங்கா சதொசவின் புதிய கிளைகளை நிறுவுதல், அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் மற்றும் பச்சைப்பயறுகளை அரசால் கொள்வனவு செய்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திஸாநாயக்க, ஜகத்புஷ்பகுமார, அமரகீர்த்தி அத்துகோரள, கீதா சமன்மலி குமாரசிங்க, அஜித் ராஜபக்ச மற்றும் கலாநிதி கயாஷான் நாவானந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

வீரமறவர்களை – காவிய நாயர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் இன்று..! தரணியெங்கும் பேரெழுச்சி: தமிழர் தாயகத்தில் கெடுபிடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *