உக்ரைன் – ரஷ்யாப் போரில் ரஷ்யப் படையினரால் பிடிபட்ட உக்ரைன் வீரர் ஒருவர் ரஷ்ய சிறையிலிருந்து தப்பி வந்துள்ளார்.
இந்தநிலையில் ரஷ்யாவிடம் சிறைக் கைதியாக பிடிபடுவதற்கு முன்பும் பின்னருமான அவரது நிலை குறித்து அதிர்ச்சி தரும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிற்றர் பதிவில்,
ரஷ்ய நாட்டின் வெட்கக்கேடான நாசிச மரபுகளை ரஷ்யா தொடர்ந்து பின்பற்றி வருகிறது என்பதற்கும் இந்தப் புகைப்படம் எடுத்துக்காட்டு.
இந்தப் புகைப்படங்களில் குறித்த உக்ரைன் வீரர் கைதியாவதற்கு முன் போர் வீரராக துப்பாக்கியை ஏந்திய காட்சியும் சிறை பிடித்த பின்னர், தேகம் மெலிந்து, கண்கள் அமைந்த பகுதியில் வீங்கி, விகார தோற்றத்துடன் காணப்படுவது வேதனையளிக்கிறது என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது.