இறந்தவர்களுக்கு நிம்மதியாக அஞ்சலி நிகழ்வு கூட செய்ய முடியவில்லை! – மூத்த அரசியல்வாதி கவலை

அஞ்சலி நிகழ்வை உரிமை கொண்டாடுவது வெட்கப்பட வேண்டிய விடயம் என மூத்த அரசியல்வாதியும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அஞ்சலி நிகழ்வு தேவையானது. அதை அசிங்கப்படுத்தி, அடாவடி செய்வது தேவையற்ற விடயம். அஞ்சலி நிகழ்வை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. யாரையும் அஞ்சலிக்க விடாமல் குத்தகைக்கு எடுத்ததைப்
போன்று இருக்க முடியாது. நேற்றைய செயற்பாடு மோசமானது. எம் மண்ணுக்காக உயிர் நீர்த்தவர்களை நினனவு கூருவது கட்டாயம்.

இது தவிர புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டதே அடிப்படையான மனித உரிமை மீறல். வடக்கு கிழக்கை அன்று பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வைத்திருந்ததைப் போன்று, கொழும்பிலும் அவர் செய்வதற்கு முயற்சி எடுத்துள்ளார்.

நாட்டினுடைய தலை நகரை இப்படி செய்வது, ஏற்றுக்கொள்ள முடியாது,படு பாதகமான செயற்பாடு.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *