<!–
கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு எகட் கரிடாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்து கொண்டு 90 குடும்பங்களுக்கு 30 இலட்சம் ருபா நிதி நிதியுதவியினை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு எகட் கரிடாஸின் கொழும்பு கிளை இயக்குனர் லோரன்ஸ் ராமநாயக்க மற்றும் சியோன் தேவாலய பிரதம போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசன் மற்றும் சியோன் தேவாலய போதகர் திருகுமரன் மற்றும் பொதுமக்கள் எனபலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.