12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு நேற்றையதினம் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர்கள் மாணவியினை சிகிச்சைக்குட்படுத்திய போதே மாணவி கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாருக்கு, தன்னை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply