மாவீரர் நினைவேந்தல் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றையதினம் சனிக்கிழமை(27). விசேட அதிரடி படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக குறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சட்டத்தரணி டினேஸன் குறித்த நபர் சார்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய நிலையில் குறித்த நபர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்
அதே நேரம் குறித்த முகநூல் பதிவு தொடர்பாகவும் சம்பவம் தொடர்பாகவும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்