யாழ்ப்பாணம் வலி.வடக்கு தவிசாளர் ச.சுகிதரனிடம் இராணுவத்தினர் இன்று இரவு விசாரணை நடத்தியுள்ளனர்.
வலி.வடக்கு தவிசாளர் ச.சுகிர்தன் வீட்டுக்கு முன்பாக மாவீரர் நினைவேந்தலை ஒட்டி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு உழவியந்திரத்தில் வந்த இராணுவத்தினர் தவிசாளரை அழைத்து சுடரேற்றிய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும், தன்னுடைய வீட்டில் விளக்கேற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தாம் தெரிவித்தாகவும் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.