சசிகலா ரவிராஜின் வீட்டில் விளக்கேற்றியவர்கள் தடுத்து வைப்பு!

சாவகச்சேரியில் சசிகலா ரவிராஜின் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் வீட்டுக்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் பாலமயூரன் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் அஞ்சலி நிகழ்வு நடந்ததையடுத்து வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.

வீட்டில் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மூவரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே செல்ல முடியுமென கூறி அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *