நாட்டில் நாளாந்தம் 10க்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு..!

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகளை அதிகளவில் பதிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதெல்லையை கொண்ட சிறுவர்களே, அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *