கடந்த இரண்டு தினங்களாக நாள் ஒன்றுக்கு 700 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்! இரானுவ தளபதி தெரிவிப்பு

கடந்த இரண்டு தினங்களாக நாட்டில் நாள் ஒன்றுக்கு 700 கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படை பிரிவில் இன்று நடைபெற்ற சேதனப் பசளை உற்பத்திகளை உத்தியோகபூர்வமாக இலங்கை லக்பொஹர நிறுவனத்திற்கு கையளித்து விட்டு கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும், தற்போது நாளொன்றுக்கு 15 தொடக்கம் 30 வரையிலான மரணங்கள் பதிவாகுகின்றன. இதற்குள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 84 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளில் தடுப்பூசி ஏற்றப்பட்ட விகிதாசார விட இந்த விகிதாசாரம் கூடியளவாக பதிவாகியுள்ளது.

தற்போது பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் விசேட அறிவுரையின் பேரில் 60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வர முடியாதவர்களுக்கு நடமாடும் சேவை மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,

மேலும் 20 வயதுக்கு மேற்பட்ட புற்றுநோய் உட்பட தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி இன்று முதல் ஏற்றப்பட்டு வருகின்றது.

சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார அமைச்சின் திணைக்களங்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து நாளை போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *