கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரும் குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 34 அடியை 02 அங்குலத்தை தொட்டதனால் இன்று காலை வான்கதவுகள் திறக்கப்பட்டது.
இரணைமடுக் குளமானது 36 அடி அளவைக் கொண்டுள்ளபோதும் தற்போது 34 அடி 02 அங்குலத்தை எட்டிய நிலையில் நீரைக் கடத்தி குளத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன.
நீரின் வருகை அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படலாம் என்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்திய – அமெரிக்க ஊக்கம் தேவை! சுமந்திரன் தெரிவிப்பு