மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை! சுமித் விஜேசிங்க

இலங்கையில் மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல.

மிக நீண்ட நாட்களாக ஐந்து லீற்றர் வரையறை நாட்டில் அமுலில் உள்ளது. அதிகளவில் களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்வதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஐந்து லீற்றர் என்ற வரையறை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *