தமிழகத்தில் 12 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது

தமிழகத்தில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் மாத்திரம் இன்று 1, 600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இடம்பெறுகின்றது.

மேலும்  மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை  ஒரு கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தடுப்பூசி போடாமல் இருக்கின்ற 78 இலட்சம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *