சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனை தாக்கிய இராணுவத்தினர்; உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும், சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்துகின்ற ஒரு முறைக்குக் கூட இங்கு அராஜகம் கட்டவிழ்ந்து விடப்படுகின்றது என்றும், வடக்கு – கிழக்கு சிவில் சமூகங்களின் இணைத்தலைவர் வேலன் சுவாமி தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தமிழ்த் தேசியத்தினுடைய அடிப்படையிலே அறவழியிலே பயணித்துக் கொண்டிருக்கும் எங்களுடைய இனம், இந்த நீதிக்கான நீண்ட நெடும் போராட்டத்திலே ஊடகவியலாளர் மீது பல அடக்குமுறைகள் அராஜகங்கள், பயங்கரவாதங்கள் இலங்கை அரசினுடைய அரச இயந்திரங்களாகிய இராணுவம், காவல்துறை மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் ஊடாக காலங்காலமாக முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் ஊடக சுதந்திரத்தையும், நடுநிலைமையையும், தர்மத்தையும் பேணி பாதுகாத்து, செய்திகளை சரியான வித்தத்திலே முன்னெடுத்து வந்த ஒருவர், அவர் மீதுகாட்டுமிராண்டித் தனமாக பயங்கரவாதமாக பனைமட்டையிலே முள்ளுக்கம்பியை சுற்றி தாக்கியது என்பதை கேட்கும் போதே மனம் மிகவும் வேதனையடைகின்றது.
இப்படியானதொரு ஒரு மனம் ஒரு மனிதனுக்கு வருகின்றது என்றால், அவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டம் எங்கே இருக்கின்றது? அவன் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். முகப்புத்தகத்திலே தங்கள் சுயநிர்ணயத்தை அவரது உரிமையை வெளிப்படுத்துகின்ற ஒரு முறைக்குக் கூட இங்கு அராஜகம் கட்டவிழ்ந்து விடப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
[embedded content]