சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வேலன் சுவாமிகள் சந்தித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதலை மேற்கொண்டு சித்திரவதை புரிந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த ஊடகவியலாளரை இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வேலன் சுவாமிகள் சந்தித்தார்.
இச் சம்பவத்தைக் கண்டித்து இன்று முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்! வேலன் சுவாமி (வீடியோ இணைப்பு)