அம்பலாங்கொட கந்தேகொட புகையிரத கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரு{ஹணு குமாரி ரயிலுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேனில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.