
நசீர் அஹமட் தலைமையில் இயங்குவதற்கு தீர்மானம்
அரசாங்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயற்பட்டு வருகிற முஸ்லிம் எம். பிகள் 06 பேரும் தனித்து ஓர் அணியாக இயங்க உள்ளனர் என்று தெரிய வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த இந்த எம்பிகளுக்கு எதிராக,இவர்களின் கட்சி தலைமைகள் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றன.
தலைமைகளின் கண்டிப்பான அறிவுறுத்தல்களை மீறி, பட்ஜெட்டை இவர்கள் ஆதரிப்பது வெளிப்படையான விடயம் ஆகும்.
மேலும் பட்ஜெட்டுக்கு பின்னரான அமைச்சரவை மாற்றத்தில் இவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன என்றும் தெரிகின்றது.
இந்நிலையில்,இவர்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் தனி அணியாக செயற்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்படி இரண்டு கட்சிகளையும் சேர்ந்த ஏழு, பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சி யில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி தலைமைகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.
அதேநேரம், இவர்கள் மீது, ஒழுக்காற்று விசாரணை நடத்தப்போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்து இருந்தன .
இதேவேளை, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. இதனை சவாலாக எதிர்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
