சமையல் எரிவாயுவில் தீப்பரவல் – உடனடியாக நீருக்குள் தூக்கி வீசிய மக்கள்

புத்தளம் – ஆராச்சிகட்டுவ, வைரஸன்கட்டுவ பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயு ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் மற்றும் நீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

எனினும், தீப்பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாததை அடுத்து, வெற்று வயற்காணிக்குள் சிலிண்டரை வீசி தீயை அணைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *